Print this page
Thursday, 04 September 2025 04:04

கார்த்திக்நேத்தாவின் பாடலைக்கேட்ட அந்த முதல் நொடி எங்கே?

Written by
Rate this item
(0 votes)

கண்ணதாசனுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும். அவற்றில் சில நமக்குப் பாடல்களாகக் கிடைத்திருக்கின்றன.
முத்துக்குமாருக்குள் ஏதோ ஒன்று உள்புக முயற்சித்துக் கொண்டே இருக்கும். அவருக்குள் புகுந்தவை மட்டும் நமக்குப் பாடல்களாகக் கிடைத்திருக்கின்றன.
கார்த்திக்நேத்தாவுக்குள் எப்போதும் ஒரு வெறுமை புதைந்திருக்கிறது. எதுவும் புக முடியாத அந்த வெறுமை நமக்குப் பாடல்களாக கிடைக்கின்றன.

உறக்கம் கலைந்த நேற்றைய நள்ளிரவில் இவர்களின் பாடல்களால் கடிகாரத்தை அசைத்துக் கொண்டிருந்தேன். அற்புதமான தருணங்கள் அவை. அவர்களுடன் உரையாடியது போல உணர்ந்தேன்.

அஞ்சு வண்ணப்பூவே!
காத்தா வாரேன்
காப்பா வாரேன்
ஏங்காதே

கார்த்திக் நேத்தாவின் இந்த வரிகளுடன் காலையில் கண்விழித்தேன். இந்தப் பாடலை கேட்கத் துவங்கிய அந்த முதல் நொடி எங்கே?

(படம் - புதியதலைமுறை ஆசிரியர் விருதுகள் விழாவிற்கு என் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக வந்தபோது எடுத்தது)

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Read 312 times

Latest from Admin ISR Ventures

Login to post comments